CINEMA
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு வெளியிட்ட ஹிப் ஹாப் ஆதி…! அதுவும் பள்ளிக்குழந்தைகளுடன்…? வைரலாகும் வீடியோ…!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வருபவர் தான் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழ் சினிமாவிற்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார். அதற்கு முன்பு வரை இவர் நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அனிருத் ஹிப்ஹாப் பாதையை வணக்கம் சென்னை என்ற படத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டார் என்ற பாட்டு மூலம் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு இயக்குனர் சுந்தர்.சி யின் ஆம்பள திரைப்படத்தில் பாடுவதற்கு ஆதிக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தனி ஒருவன்,இமைக்கா நொடிகள் மற்றும் அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆதி பாடியுள்ளார். மேலும் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இன்று தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருக்கு பாரதியார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது பள்ளிக் குழந்தைகளுடன் வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த அவர், ‘இந்த நாளைத் தொடங்குவதற்கு என்ன வழி. அந்த சிறுவர்கள் நான் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதை உறுதி செய்து கொண்டனர். அதனால் அவர்கள் அதை பெற்றோரின் தொலைபேசியிலிருந்து எடுக்கலாம். தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு குழந்தைகளின் வேகம் கண்டு வியப்படைகிறேன். அவர்கள் அதை சரியாக உட்கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது நம் கையில் என்று’ குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
View this post on Instagram