மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 உயர்வு?…. பேரவையில் இன்று வெளியாகும் மெகா அறிவிப்பு…. குடும்பத் தலைவிகளுக்கு ஜாக்பாட்….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துறைக்கான அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் சட்டப்பேரவையில் கொள்கை விளக்கக் குறிப்பை வாசித்து புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடவுள்ள சூழலில், இதில் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பும் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தொகை அதிகரிக்கப்பட்டால், அது மாநிலத்தின் கோடிக்கணக்கான பெண்களுக்குப் பெரும் பயனளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக அமையும்.