டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்கவும், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும் அமைச்சர் விக்னேஷ் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். சமீபகாலமாக சமூக ஊடகங்களில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 முதல் ₹30 வரை வசூலிக்கப்படுவதாகப் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் கடைப்பணியாளர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும், நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் இயங்கும் சில இளைஞர்களைக் 'கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்…
அதிமுக முன்னாள் எம்பி டாக்டர் வேணுகோபால் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் தற்போதைய தலைமை, உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் பின்னடைவுகள்…
தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளார். கடவுள் நம்பிக்கையும், ஜோதிடக்…
சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில்…