டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்…! 40 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வந்ததா?… வெளியானது குரூப்பின் தற்போதைய புகைப்படம்… அதிர்ச்சியில் கேரளா…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

கேரளாவின் முக்கிய தலைமறைவு குற்றவாளியான சுகுமார குரூப், மலேசியாவில் புதிய அடையாளத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறி முதியவர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் பேசுபொருளானது. ஆனால், அந்தப் படத்தில் இருப்பது குரூப் அல்ல என்றும், அவர் திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த தாமோதர மேனன் என்றும் கேரள காவல்துறையின் சிறப்புப் பிரிவும், சம்மந்தப்பட்டவரின் உறவினர்களும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலம் இணையத்தில் பரவிய அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு வெளியான ‘குரூப்’ திரைப்படத்திற்குப் பிறகே, இந்த வழக்கு கேரளா மட்டுமின்றி இந்திய அளவில் மீண்டும் பிரபலமடைந்தது. நீண்ட காலமாக குரூப் பிடிபடாததால், அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கருதி குற்றப்பிரிவு போலீசார் வழக்கை முடித்து வைத்திருந்தனர். இந்தச் சூழலில், அவர் புருனே அல்லது மலேசியாவில் வாழ்வதாகத் திடீரெனப் பரவிய செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இந்த வழக்கை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

   

கடந்த 40 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் இருக்கும் குரூப் விவகாரம், கேரள காவல்துறைக்கு தொடர்ந்து பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. வளைகுடா நாடுகள் உட்பட பல இடங்களில் அவர் இருப்பதாக வந்த முந்தைய வதந்திகளைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு விசாரணைகளை நடத்தியுள்ளனர். தற்போது வைரலான புகைப்படம் போலியானது என்றாலும், இதுதொடர்பாக இன்டர்போல் உதவியுடன் கூடுதல் விவரங்களைச் சரிபார்க்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. குரூப் குறித்து தற்போது பரவும் அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளே என அரசுத் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.