மக்களே உஷார்..! நள்ளிரவுக்கு பின் சென்னையில் ஆட்டம் ஆரம்பம்… வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை…!!

By Soundarya on கார்த்திகை 29, 2025

Spread the love
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கனமழை பொலிந்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில் தற்போது டிட்வா புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னையில் இன்று  நள்ளிரவுக்கு பின் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக 80 கி.மீ. வரை காற்று வீசக்கூடும். இன்றும் நாளையும் விட்டு விட்டு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும். புயலானது சென்னைக்கு அருகில் வரும்போது அது வலுவிழந்த நிலையில் இருக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.