உங்க காதில் அடிக்கடி அழுக்கு அதிகமானால் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… பிறகு உங்களுக்கு தான் பேராபத்து… எச்சரிக்கை…!

By Nanthini on தை 1, 2026

Spread the love

பொதுவாகவே காதில் இயற்கையாகவே மெழுகு போன்ற அழுக்கு இருக்கும். அவை வெளியே இருந்து உள்ளே நுழையும் தூசு மற்றும் கிருமிகளை காதுக்குள் செல்ல விடாமல் தடுக்கின்றது. இவை அளவுக்கு அதிகமாக சேரும்போது காது அடைப்பு, வலி மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு ஆகியவை ஏற்படும். காதில் அழுக்கு அதிகமாகி விட்டால் மருத்துவரின் ஆலோசனையை ஏற்று சொட்டு மருந்து பயன்படுத்தலாம். இவை அழுக்குகளை மென்மையாக்கி தானாகவே வெளியே வருவதற்கு உதவி செய்யும். குளித்த பிறகு காதின் வெளிப்புறத்தை மென்மையான துணையால் துடைக்க வேண்டும். அதாவது காது மடல் மற்றும் காதின் பின்பகுதி ஆகியவற்றை சுத்தமாக வைப்பது அவசியம்.

வலி மற்றும் காது அடைப்பு நீடித்தால் உடனே மருத்துவரை அணுகி சுத்தம் செய்வது அவசியம். காதுக்குள் அரிப்பு ஏற்படும்போது காட்டன் பட்ஸ், தலைக்கு பயன்படுத்தும் ஹேர் பின், குச்சி, தீக்குச்சி, பறவைகளின் இறகுகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இவை காதில் இருக்கும் அழுக்கை இன்னும் ஆழமாக உள்ளே தள்ளுவதுடன் ஜவ்வை கிழித்து விடவும் செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் தானாக எந்த ஒரு எண்ணையையும் காதுக்குள் விடக்கூடாது. காது அழுக்கையை அகற்றுவதற்கு கூர்மையான பொருள்களை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இது காது கேளாமையை ஏற்படுத்திவிடும். எனவே நாமாக காதை சுத்தம் செய்வதை விட மருத்துவரை அணுகி சுத்தம் செய்வது சிறந்தது