“இது அவரு வேலையாதான் இருக்கும்…” தனது மனைவி அழுது வெளியிட்ட வீடியோ குறித்து முனிஷ்ராஜா பகிர்ந்த ஷாக்கிங் தகவல்…

By Begam on பிப்ரவரி 3, 2024

Spread the love

நடிகர் ராஜ்கிரனின் மகள் பிரியா, நாதஸ்வரம் சீரியல் காமெடி கேரக்டரில் நடித்த முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நடிகர் ராஜ்கிரண் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை. இதனால் அவர் , ‘ பிரியாவை தனது மகளே இல்லை என்றும், அவர் தனது வளர்ப்பு மகள் என்றும் கூறியது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

   

முனிஷ் ராஜா பிரியா காதல் வீட்டிற்கு தெரிந்த நிலையில் இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால், இருவரும் அதிரடியாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தனர் என கூறப்பட்டது. மேலும் கோபமடைந்த ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘ என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ளஅனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை.

   

 

எனக்கு திப்பு சுல்தான் என்ற நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது.  இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை “வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். பணம் பறிப்பதற்க்காகவும் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெருவதற்காகவும் மட்டுமே முனீஷ் காந்த் பிரியாவை திருமணம் செய்துள்ளார் .இருவருமே இனிமேல் என் குடும்பத்தை சேர்ந்தவர்களே கிடையாது. முனீஷ்காந்த் பிரியாவிற்கு கணவராகலாம் அனால் எப்பொழுதும் எனக்கு மருமகன் ஆக முடியாது. என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இவர்களது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென்று பிரியா ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் ‘தான் முனீஸ்ராஜாவை பிரிந்து விட்டேன். அதுவும் சில மாதங்களுக்கு முன்பே எங்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு நான் கஷ்டத்தில் இருக்கும்போது என்னுடைய வளர்ப்பு தந்தை தான் எனக்கு சில உதவிகளை செய்திருக்கிறார்.

நான் என்னுடைய திருமணத்தால் என் வளர்ப்பு தந்தையை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க டாடி’ என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இது இணையத்தில் அதிகமாக பரவி வந்த நிலையில் இது குறித்து முனீஸ் ராஜாவிடம் பிரபல பத்திரிக்கையில் இருந்து பேசி இருக்கின்றனர். அப்போது முனீஸ் ராஜா இது ராஜ்கிரணின் வேலை தான். எதையும் இப்போது சொல்வதற்கு இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று எமோஷனலாக கூறினாராம்.