இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் அழகான திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா…. இதுவரை யாரும் பார்த்திராத UNSEEN புகைப்படம் உள்ளே….

By Begam

Published on:

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் அழகான திருமண புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இவர்  இசையமைத்த ‘ஸ்லிம் டாக் மில்லியனர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று  இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.

   

1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். தன்னுடைய முதல் படத்திலியே  தன்னுடைய முத்திரையை பதித்தார். இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்காக அவர் ‘தேசிய விருது’ பெற்றார். தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

இந்தியாவின் மிகப்பெரிய விருதான ‘பத்மபூஷன் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. இசையால் உலக திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். அவர் இசையில் மயங்காதவர் யாருமில்லை. இதனால் உலகம் முழுக்க தனக்கென்று ரசிகர்களை கொண்டுள்ளா.ர் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருது பெற்ற ஒரே இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.

இவருடைய இசையமைப்பில் தற்சமயம் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவருடைய இசை என்றே கூறலாம். அதேபோல வருகிற 30-ஆம் தேதி ரிலீசாக இருக்கின்ற ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் 1995ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் தற்பொழுது ஏ ஆர் ரகுமான் சைராபானுவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….