Categories: சினிமா

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… வைரலாகும் புகைப்படம் இதோ…

Spread the love

70 s களில்  ரசிகர்களின் கனவு  நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.1969 ஆம் ஆண்டு ‘துணைவன்’ என்ற படத்தின்  குழந்தை நட்சத்திரமாக  திரையுலகில் அறிமுகமாகினார்.இப்படத்தில் முருகன் வேடமிட்டு நடித்து ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’படத்தில்  கதாநாயகியாக புது அவதாரம் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து இவர் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  தமிழ் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ,இந்தி  என  பல மொழிகளின் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளார்.நடிகை ஸ்ரீதேவி  பிரபல முன்னணி நடிகர்களான  ரஜினி மற்றும் கமலுடன் தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில்  நடித்து தமிழ் திரையுலகில் தனக்கான முத்திரையை பதித்தார்.இதை தொடர்ந்து  பாலிவுட் படங்கள் நடிப்பதில்  மிகவும் கவனம் செலுத்தி வந்தார். 1980களில்  இந்தி  படங்களின் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா. மிதுன் சக்கரவர்த்தி ,அமிதாப்பச்சன் ,ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ,என பிரபல பாலிவுட் நடிகர்களுடன்  ஜோடியாக நடித்துள்ளார்.நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை கொண்டவர்.இவர் 300 படங்கள் நடித்துள்ளார்.நடிகை ஸ்ரீதேவி திரைப்பட  தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் 2018 ஆம் ஆண்டு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார்.  இன்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள்  அவரை நினைவு கூறும் வகையில் அவரது மகள் ஜான்விக் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் அவர் அம்மா மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக டேக் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Samrin

Recent Posts

“ஒடிசாவில் பயங்கரம்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட தாஹிபரா.. 27 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிருக்குப் போராட்டம்… உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை”….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், 'தாஹிபரா' எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட…

11 minutes ago

“பகீர்!… வாயைத் திறந்து லாரியை விழுங்கிய பூமி… மணாலி-லே நெடுஞ்சாலையில் நடந்த திகில் சம்பவம்… வைரலாகும் திக் திக் வீடியோ”…!!!

வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகளில் பயணம் செய்வது மனதிற்கு இதமளித்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தன் கோர முகத்தைக்…

24 minutes ago

“அப்பா, இதுதான் கடைசி கால்..” தற்கொலைக்கு முன் தந்தையிடம் சொன்ன ‘அந்த’ ஒரு ரகசியம்… நீதிபதியின் மரணத்தில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் மர்மம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…

35 minutes ago

“இதயமே இல்லையா?… மாமியார் மீது ஏறி அமர்ந்து மருமகள் செய்த கொடூரம்… வீடியோ எடுத்த குடும்பத்தினர்… பஞ்சாபில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”….!!!

பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

45 minutes ago

“மெட்ரோவுக்கே ஆப்பு!… மாதவரத்தில் மெட்ரோ பொருட்களைத் திருடிய பலே திருடர்கள்!.. புளியந்தோப்பு வாலிபர்களுக்கு போலீஸ் கொடுத்த ‘ட்ரீட்’…!!!

சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…

54 minutes ago

“என் பொண்டாட்டிக்கிட்டயே சண்டை போடுவியா?”… வெளிநாட்டு மனைவியிடம் வம்பு செய்த நண்பன்… குடிபோதையில் அழைத்துச் சென்று கொன்று புதைத்த ‘உதயநிதி கும்பல்’… புதுக்கோட்டையில் அரங்கேறிய கொடூரக் கொலை….!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…

1 மணத்தியாலம் ago