கணவரை விவாகரத்து செய்து விட்டாரா நடிகை சுவாதி…? அவரே நச்சுன்னு சொன்ன பதில்…!

By Begam

Updated on:

2008 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இத்திரைப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிடோர் நடித்திருந்தனர். சுப்ரமணியபுரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது.

   

இத்திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. இதைத்தொடர்ந்து  கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன்,  போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ,பின்னணி பாடகி ,என பன்முக திறமைகளை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , என பலமொழி படங்களில் நடித்துள்ளார்.  நடிகை சுவாதி இந்தோனேசியாவைச் சார்ந்த விகாஸ் என்பவரை  2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

விகாஸ் ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் ஒரே மலையாளத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு தன் குடும்பத்தை கவனித்து வந்தார்.  இந்நிலையில் நடிகை சுவாதி கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது நடிப்பில் தெலுங்கில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘மந்த் ஆப் மது’ பட புரொமோஷன் பணியில் கலந்துக்கொண்டார். அபோது செய்தியாளர்கள் ஸ்வாதி தனது கணவரான விகாஸை விவாகரத்து செய்யப்போவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகை ஸ்வாதி, ‘இந்த விஷயம் குறித்து நான் எதுவும் சொல்லப்போவது இல்லை. நான் 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன் முன்பெல்லாம் எப்படி பேசுவது என எனக்கு தெரியாது. ஆனால் தற்போது அப்படி இல்லை. இங்கு நடக்கும் நிகழ்ச்சிக்கும் நீங்கள் கேட்கும் கேள்விக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் எனது பர்சனல் வாழ்கை குறித்து எதுவும் கூறப்போவது இல்லை, அதனால் நான் இந்த கேள்விக்கு பதிலளிக்கப்போவது இல்லை’ என நச்சுன்னு பதிலளித்துள்ளார் நடிகை சுவாதி.