“நிம்மதியே இல்லை” அன்று ₹18,000 சம்பளத்தில் இருந்த மகிழ்ச்சி… இன்று துபாயில் இருந்தாலும் கிடைக்கல.. இணையத்தை உலுக்கும் ஒரு பெண்ணின் உண்மை வாக்குமூலம்..!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

பெங்களூருவில் தனது முதல் வேலையில் சேர்ந்தபோது வெறும் ₹18,000 மட்டுமே ஊதியமாகப் பெற்ற அந்தப் பெண், அந்தத் தருணத்தில் தான் உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரியாக உணர்ந்ததாகக் கூறுகிறார். அந்தச் சிறிய வருமானத்தைக் கொண்டே தனது தங்கும் விடுதி (PG) வாடகையைச் செலுத்தி, தனக்குப் பிடித்த உடைகளை வாங்கி, அலுவலக உணவகத்தில் வயிறார உண்டு, நண்பர்களுடன் கேளிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்திருக்கிறார். இத்தனை செலவுகளுக்குப் பிறகும் மாதம் ₹2,000 முதல் ₹3,000 வரை சேமிக்க முடிந்த அந்த நாட்களில், வாழ்க்கையைப் பற்றி அவருக்கு எந்தக் குறையுமே இருந்ததில்லை.

ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஓட்டத்தில் இணைந்த அவர், இன்று துபாயில் தங்கி அதீத ஊதியம் ஈட்டி வருகிறார். இருப்பினும், முன்பு பெங்களூருவில் ₹18,000 சம்பளத்தில் கிடைத்த அந்த உண்மையான மகிழ்ச்சி இப்போது அவரிடம் இல்லை. எந்தக் காரணமும் இன்றி அடிக்கடி மனநிலை மாற்றத்திற்கும், சோகத்திற்கும் ஆளாவதாகக் குறிப்பிடும் அவர், வாழ்க்கையில் முன்னேறிவிட்ட போதிலும் ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாக உணர்கிறார்.

   

வருமானம் அதிகரிக்கும்போது அதனுடன் சேர்ந்து எதிர்பார்ப்புகளும், வேலைப்பளுவும், மற்றவர்களுடனான ஒப்பீடுகளும் (Comparison) தானாகவே வளர்ந்துவிடுகின்றன என்பதை இந்த இளம்பெண்ணின் கதை உணர்த்துகிறது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்துவிடாது என்பதும், தேவையற்ற மன அழுத்தமும் போட்டியுமே ஒரு மனிதனின் நிம்மதியைப் பறிக்கின்றன என்பதும் இவரது அனுபவம் மூலம் வெளிப்படுகிறது.