ஆலப்புழை மாவட்டம் சேத்தலை பகுதியை சேர்ந்த ரமேசன் (45) என்பவர் தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் ஆகி பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த இவர் அதே பகுதியில் வசித்த 55 வயது ஓமனா என்ற பெண்ணுடன் பழகத் தொடங்கினார். திருமணம் குறித்து மனம் உடைந்திருந்த ஓமணாவுக்கும் ரமேஷனுக்கும் நட்பு ஆழமான பந்தமாக மாறியது. ஒரு நாள், இனிமேல் வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் இருவருக்கு வந்ததால் உறவினர்களிடம் ஆலோசித்த போது வயது எதுவாக இருந்தாலும் மனம் இளமையாக இருந்தால் போதும் எனக் கூறி அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனால் கிராமமே சாட்சியாக இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ரமேசன் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் கடுமையாக காயம் அடைந்தார். காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக உறவினர்கள் திருமணத்தை தள்ளி வைக்க நினைத்த நிலையில் காதலில் உறுதியான ரமேசன் மற்றும் ஓமனா எது வந்தாலும் நிச்சயிக்கப்பட்ட நாளில் தான் தாலி கட்ட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர்.
அதன்படி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் ரமேசன் தனது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார். படுக்கையில் அமர்ந்தபடி அவர் தன் காதலிக்கு தாலி கட்டினார். உறவினர்கள் அனைவரும் மலர் தூவி வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகு உடனே ஓமனா காயமடைந்த தனது கணவரை மருத்துவமனையில் அன்புடன் கவனிக்க தொடங்கினார். இந்த இனிய தருணம் காதலுக்கு வயது கிடையாது என்ற உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…