ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். ஆனால் ரேஷன் கார்டில் நிறைய மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். குடும்ப வருமானம் என்பது அவசியமாகும்.
நிறைய பேர் குடும்ப வருமானத்தை குறைவாக கூறி ரேஷன் கார்டுகளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிவிட்டு ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல நிறைய பேர் போலியான ஆவணங்களை வைத்து இரண்டு மூன்று ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்துள்ளன. கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காமல் ரேஷன் கார்டுகளை பலரும் பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த ரேஷன் கார்டுகளை அரசு தற்போது ரத்து செய்து வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பயனாளிகள் அனைவரும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும். அதை செய்யாதவர்கள் மீதும் இரண்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கே வை சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…