விடுதியில் ரகசிய மீட்டிங்…! அரசு அதிகாரியை சுற்றி வளைத்த 12 பேர்… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

By Devi Ramu on பங்குனி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில், பணியிட மாறுதல் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய குடும்ப நலத்துறை திட்ட மேலாளர் ஜித்தேஷ் சோனியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். பாதிக்கப்பட்ட மிராஜ் முகமது என்பவரை மீண்டும் பழைய இடத்திற்கே பணி அமர்த்த முதலில் ரூ.3.5 லட்சம் பேரம் பேசப்பட்டு, இறுதியில் 2 லட்ச ரூபாய்க்குச் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஜான்சியில் இருந்து வந்த 12 பேர் கொண்ட அதிரடிப் படை, ஒரு விடுதியில் வைத்து லஞ்சப் பணத்தைப் பெற்றபோது அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தது.

இந்தத் திடீர் சோதனையின்போது சி.எம்.ஓ (CMO) அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓய்வு பெறவிருக்கும் உயரதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கைதான மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, இந்த ஊழல் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.