இருக்குறதுலயே best-அ அனுபவிக்கணும்னு கவுண்டமணி நெனைப்பாரு… அதுக்குக் காரணம் இதுதான் – பார்த்திபன் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஜூலை 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.

   

சினிமாவில் தனக்கு பிரேக் கிடைப்பதற்கு முன்பு கடுமையான வறுமையில் வாடினார் கவுண்டமணி. நாடகத்தில் நடித்துதான் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை ஓட்டவேண்டிய சூழலில் இருந்தார். 16 வயதினிலே படத்தில் பார்த்தாலே அவர் ஒல்லியான தோற்றத்தில்தான் காணப்படுவார்.

   

அதன் பின்னர் காமெடி சூப்பர் ஸ்டார் ஆனார். ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார். 7 கார் இல்லை, 10 கார்கள் வாங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரில் ஷூட்டிங் வந்து இறங்கினார். ஆடம்பரங்களை விரும்பாத கவுண்டமணி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக இருந்தாராம்.

 

கவுண்டமணியின் இந்த குணம் பற்றி பேசியுள்ள பார்த்திபன் “கவுண்டமணி அண்ணனோடு நான் டாட்டா பிர்லா படத்தில் நடிக்கும்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஒரு ஊரில் ஷூட்டிங் இருந்தால், அந்த ஊரில் இருக்கும் 7 ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார். இருக்கிற உணவிலே சிறந்ததைதான் சாப்பிடுவார். அப்போதே அவர் ஒரு ராஜா போலதான் வாழ்ந்தார். அவருக்கு அதல்லாம் பிடித்திருந்தது. ஏனென்றால் வாழ்க்கையின் முதல் பகுதியில் அவர் சந்தித்த வறுமை அப்படி.

ஆனால் சினிமாவில் அவர் தன்னுடைய பரபரப்பை எல்லாம் இழந்தபின்னர் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. இப்போதும் ஜாலியாக எங்கேயாவது வாக்கிங் போய்க் கொண்டு இருப்பார்.” எனக் கூறியுள்ளார்.