சமீபநாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்களுக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,05,760-க்கு விற்பனையான நிலையில், வெறும் பாதியிலேயே சவரனுக்கு சுமார் ரூ. 8,000 வரை அதிகரித்து அனைவரையும் மலைக்க வைத்துள்ளது. கடந்த மாதம் வரை சர்வதேச சந்தை நிலவரத்தால் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1 லட்சத்துக்கும் கீழே குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் நிபுணர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, தங்கத்தின் விலையைத் தொடர்ச்சியாக மேல்நோக்கிப் பயணிக்க வைத்துள்ளன.
இன்றைய நிலவரப்படி (ஆகஸ்ட் 17), 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160-க்கும், ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000 என்றும் விற்பனையாகி வருகிறது. இந்த விலையேற்றம் தொடர்ந்து நீடிக்குமா அல்லது குறையுமா என்பதில் தெளிவற்ற சூழலே நிலவுகிறது. இருப்பினும், வரும் மாதங்களில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் பட்சத்தில், தங்கத்தின் விலையில் ஓரளவு சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…
தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அரங்கேறி வரும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் பொதுமக்கள்…
இன்றைய சட்டமன்ற அலுவலில் உரையாற்றிய சபாநாயகர் JCD பிரபாகர், தவெக அரசின் 100 நாள் சாதனைகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப்…