கடந்த இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 90,000-க்கும், கிராமுக்கு 70ரூபாய் உயர்ந்து 11,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, தற்போது உயர்ந்துள்ளது.
