CINEMA
அர்ஜூன் வீட்டிற்கு தினமும் வந்த பாம்பு?? அம்மனின் சாபத்தால் வீட்டையே காலி பண்ண மர்ம சம்பவம்!!
ஆக்சன் கிங் என்று புகழப்படும் அர்ஜூன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் பக்தர் ஆவார். இவர் தனது சொந்த தோட்டத்தில் மிக பிரம்மாண்டமான ஒரு ஆஞ்சநேயர் கோவிலை கட்டியுள்ளார். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவர் மீது அம்மன் சாபம் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தையும் கூறுகிறார்கள்.
அதாவது பல வருடங்களுக்கு முன்பு அர்ஜூன் சென்னை சாலி கிராமம் பகுதியில் ஒரு வீட்டை கட்டினாராம். அந்த வீட்டில் அவர் குடியேறி பல மாதங்கள் தங்கியிருந்தபோது அவர் வீட்டிற்கு அருகே ஒரு அம்மன் கோவில் இருந்ததாம்.
அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர்கள் அந்த அம்மன் கோவிலை சுற்றி வருவது வழக்கமாம். ஆனால் அந்த அம்மன் கோவிலை ஒட்டி அர்ஜூன் வீட்டின் காம்பவுண்ட் கட்டப்பட்டிருந்ததாம். ஆதலால் பக்தர்களால் சுற்றி வரமுடியவில்லையாம்.
இதனால் கோவில் நிர்வாகத்தினர் அர்ஜூனிடம் தங்களது காம்பவுண்டில் கொஞ்சம் இடம் கொடுத்தீர்கள் என்றால் பக்தர்கள் சுற்றி வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தார்களாம். ஆனால் அர்ஜூன் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அர்ஜூனின் வீட்டிற்கு தினமும் பாம்புகள் வரத்தொடங்கியதாம். அர்ஜூனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். ஆதலால் சில நாட்களிலேயே அந்த வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டாராம்.