நோய்டா அமிட்டி சர்வதேசப் பள்ளியில் பயிலும் யுகேஜி (UKG) மாணவன் ஒருவன், பள்ளிப் பேருந்தில் தூங்கியதால் சுமார் 7 மணி நேரம் பேருந்திற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் தனது மகனைப் பேருந்தில் ஏற்றிவிட்ட தாய், மாலை பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததைக் கண்டு பதற்றமடைந்து பள்ளிக்கு விரைந்தார். “நானே என் மகனைப் பேருந்தில் ஏற்றிவிட்டேன், அவன் எங்கே?” என்று கதறிய பெற்றோரின் கேள்வியால் பள்ளி நிர்வாகம் தேடுதல் வேட்டையில் இறங்கியது.
சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மாணவன் பள்ளியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதால் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு மற்றும் பேருந்து உதவியாளரின் கவனக்குறைவு ஆகியவை குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியில் குடிகார கணவன் செய்த கொடூரத்தால், மனைவியே அவனைக் அடித்துக் கொலை செய்த துயரச்…
சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…
பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…
கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…