“என் பிள்ளையை எங்கே.?” பள்ளி நிர்வாகத்திடம் சென்று கதறிய பெற்றோர்… பள்ளியிலிருந்து 25கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து…. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி…!!

Spread the love

நோய்டா அமிட்டி சர்வதேசப் பள்ளியில் பயிலும் யுகேஜி (UKG) மாணவன் ஒருவன், பள்ளிப் பேருந்தில் தூங்கியதால் சுமார் 7 மணி நேரம் பேருந்திற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் தனது மகனைப் பேருந்தில் ஏற்றிவிட்ட தாய், மாலை பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததைக் கண்டு பதற்றமடைந்து பள்ளிக்கு விரைந்தார். “நானே என் மகனைப் பேருந்தில் ஏற்றிவிட்டேன், அவன் எங்கே?” என்று கதறிய பெற்றோரின் கேள்வியால் பள்ளி நிர்வாகம் தேடுதல் வேட்டையில் இறங்கியது.

சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மாணவன் பள்ளியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதால் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு மற்றும் பேருந்து உதவியாளரின் கவனக்குறைவு ஆகியவை குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“என் நட்பு வட்டத்தில் அவர் மட்டும்தான்!”… சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட அந்த ஒரு பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தென்னிந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா, சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி எழும் பல்வேறு…

5 minutes ago

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

15 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

25 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

39 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

40 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

42 minutes ago