“5 வருஷம், ஒரு குழந்தை, திருமண வாழ்க்கையிலும் மறவாத காதலன்”… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அடுத்த நொடியே காதலுக்கு நேர்ந்த சோகம்….!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே காதலை மறக்க முடியாமல் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும், அந்த துயரச் செய்தி கேட்டு அவரது காதலனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகாச்சி பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரும், டிராவல்ஸ் தொழில் செய்து வந்த பாண்டி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சசிகலாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வேறொரு நபருடன் திருமணமும் செய்து வைக்கப்பட்டது. நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த போதிலும், சசிகலாவால் தனது பழைய காதலை மறக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகும் சசிகலா தனது காதலன் பாண்டியுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் தனது கணவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், சசிகலா பாண்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி சசிகலாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மன உளைச்சலில் இருந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் துயரச் செய்தி, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு சென்றிருந்த பாண்டிக்கு அவர் ஊர் திரும்பும் வழியில் தெரியவந்தது. தருமபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே வந்தபோது தனது காதலி இறந்த செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போன பாண்டி, அங்கேயே சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகால பிரிவிற்குப் பிறகும் காதலை மறக்க முடியாமல் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு மரணங்கள் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago