திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செட்டிபாளையம் சாலைப் பகுதியில், பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையின் போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று திடீரெனக் கிழிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, காற்றின் வேகத்தில் கிழிந்த பேனர் எதிர்பாராத விதமாகப் போர்த்தியது போல் விழுந்தது. இதில் நிலைதடுமாறிய வாகன ஓட்டி சாலையிலேயே விழுந்தார். நல்வாய்ப்பாக, பின்னால் வந்த வாகனங்கள் வேகம் குறைவாக இருந்ததாலும், அவர் சுதாரித்துக்கொண்டதாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பதபதைப்பை ஏற்படுத்தி வருகின்றன. சூறைக்காற்று வீசும் போது இது போன்ற பலவீனமான பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. உரிய அனுமதியின்றி அல்லது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி வைக்கப்படும் பேனர்கள் குறித்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பருவமழை மற்றும் காற்று வீசும் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…