Categories: சினிமா

மொத்த அன்பும் ஒருத்தவங்க மேல தான்னு நெனச்சோம்.. 11 வருஷம் கழிச்சி 2-வது குழந்தை பெத்துக்கிட்டது இதனால தான்.. மனம் திறந்த காயத்ரி..

Spread the love

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியின் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் நடிகை காயத்ரி யுவராஜ். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர், சில வருடங்களுக்கு முன்னால் டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் கொண்டார்.  இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சில ஆட்களுக்கு முன்னால் காயத்ரியும், அவரது கணவரும் லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்தனர்.

அதில் காயத்ரி பேசும் போது, “ நான் உண்மையில் மகன்தான் பிறப்பான் என்று நினைத்தேன். ஆனால் இவர்தான் இல்லை… இல்லை… கண்டிப்பாக பெண் குழந்தை தான் எனக்கு வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.   பிரசவம் முடிந்து குழந்தை வெளியே வந்த பின்னர் கூட எனக்கு பெண் குழந்தைதான் பிறந்து இருக்கிறதோ, என்ற சந்தேகம் இருந்தது. உடனே நான் மருத்துவரிடம் எனக்கு பிறந்தது ஆண் குழந்தை தானே என்று கேட்டு விட்டேன்.. இதைக்கேட்ட டாக்டர் குழந்தையை என்னிடம் எடுத்து காண்பித்து, இல்லை பெண் குழந்தை தான் பார் என்று சொன்னார்.

எங்களுடைய மகனுக்காக தான் 11 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் இவளை பெற்றெடுத்தோம். எதனால என்றால், எங்களுடைய மொத்த அன்பையும் அவனுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் நாங்கள் அவன் பிறந்த அடுத்த சில வருடங்களில் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை.


ஆனால் எங்கள் மகனுக்கு இன்னொரு துணை வேண்டும் என்று நினைக்கவில்லை, அவனே எங்களிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் என்னுடன் விளையாட தங்கையோ தம்பியோ இல்லை என்று, அவனுடைய ஏக்கம் எங்களுக்கு புரிய ஆரம்பித்தது. அதன் பின்னர்தான் நாங்கள் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தோம்.  உண்மையில் அவன் இதனை எப்படி எடுத்துக் கொள்வான் என்பது குறித்தான சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால் அவன் பாப்பாவை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்கிறான். தயவு செய்து ஒரு குழந்தையோடு நிப்பாட்டி விடாதீர்கள். அந்த குழந்தைக்கு இன்னொரு ஆதரவு வேண்டும்.

Ranjith Kumar

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

53 minutes ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

1 மணத்தியாலம் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

1 மணத்தியாலம் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

1 மணத்தியாலம் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

1 மணத்தியாலம் ago