Connect with us

‘நான் பாட்டு பிடிக்கலைன்னா இளையராஜா மாத்திடுவாரு’… ஹிட் பாடல் நல்லா இல்லைன்னு குட்டைய குழப்பிய கங்கை அமரன்… நல்ல வேள தப்பிச்சது!

CINEMA

‘நான் பாட்டு பிடிக்கலைன்னா இளையராஜா மாத்திடுவாரு’… ஹிட் பாடல் நல்லா இல்லைன்னு குட்டைய குழப்பிய கங்கை அமரன்… நல்ல வேள தப்பிச்சது!

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார். 80 களில் அவரை ஒரு கடவுள் போல நினைத்த இளம் இயக்குனர்கள் அவர் இசைக்காகவே திரைக்கதை எழுதி படமெடுத்தார்கள்.

   

#image_title

 

அதில் முக்கியமானவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். அவர் இயக்கிய முதல் படமான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் ஒரு ம்யூசிக்கல் ஹிட்டாக அமைந்தது. பாடல்களுக்காகவே அந்த திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது என்றால் அது மிகையாகாது. அந்தளவுக்கு அந்த படத்தில் அனைத்தும் ஹிட்டாகின.

இந்நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பற்றி பேசிய கங்கை அமரன் “நான் ஒரு பாடல் நல்லா இல்லைன்னு சொன்னா  எங்க அண்ணன் உட்னே மாத்திடுவாரு. அப்படிதான் பயணங்கள் முடிவதில்லை படத்துல இருக்குற ‘சாலையோரம் சோலை ஒன்று’ என்ற பாடல் எனக்குப் பிடிக்கவில்லை. மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது அது சுமார்தான் என சொன்னேன்.

அதனால் அந்த பாடலை மாற்றிவிடலாம் என இளையராஜா சொல்லிவிட்டார். ஆனால் இயக்குனர் சுந்தர்ராஜனோ பாடல் நன்றாகதானே இருக்கிறது என்றார். ஆனாலும் வேறு நல்ல பாடலை போடலாம் என்றார் இளையராஜா. ஆனால் அவருக்கு நேரம் இல்லாததாலும் படத்தின் ரிலீஸ் நெருங்கி விட்டதாலும் அந்த பாடலை மாற்றவில்லை. அதனால் அந்த பாடல் தப்பித்தது” எனக் கூறியுள்ளார்.

Continue Reading
To Top