மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை இந்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணிக்கு கல்லூரிக்கு வந்தார். அப்போது திடீரென வந்த கும்பல் ஆண் நண்பரை விரட்டி விட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியின் நண்பர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை கூறியதாவது, எனது மகள் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்கிறார். முதல்வர், டிஜி என அனைவரும் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். எனது மகளை ஒடிசாவுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கொடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். இங்கு எனது மகளின் பாதுகாப்பில் ஆபத்து உள்ளது.
