தவெக பெண் நிர்வாகி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. MLA சரவணன் காப்பதாகப் பகீர் குற்றச்சாட்டு – முதல்வர் விஜய் கண்டுகொள்ளவில்லை எனக் கண்ணீர்..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பெண் நிர்வாகி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், தம்மைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் இருவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சரவணன் என்பவர் பாதுகாப்பு அரணாகப் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், அந்த எம்.எல்.ஏ தனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கண்ணீர் மல்கப் பேசியுள்ள அந்தப் பெண், தமிழக வெற்றிக் கழகத்தின் சக நிர்வாகிகள் தம்மைக் குறித்து சமூக வலைத்தளங்களில் (SM) தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய இழிவான அவதூறு பரப்புரைகள் குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் யாரும் இதுவரை எவ்விதக் கவனமும் செலுத்தவில்லை, தம்மைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.