தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது முதல் திமுகவினர் தூக்கத்தை இழந்து தவித்து வருவதாகக் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் விமர்சித்துள்ளார். மேலும், மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் தங்களைக் கழுவிக் கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயன்றபோது திமுகவினருக்கு எங்கே போனது சூடு, சொரணை என்று சாடியுள்ளார். அதிமுகவினரைப் போல் சூடு, சொரணை இருந்தால், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சிறுமைப்படுத்த முயன்றால், அதற்கான பதிலடி மிகவும் பலமாக இருக்கும் என்பதைத் திமுகவினருக்குப் பகிரங்க எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் கணபதி சிவக்குமார் தனது அறிக்கையில் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…
தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…