EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 7.5 மடங்காக உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக, தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ₹1,000 என்ற தொகை, ₹7,500 ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஓய்வூதிய உயர்வை வழங்கக் கோரி PF ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். அதன் விளைவாக, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் இந்த பென்ஷன் உயர்வை மத்திய அரசுக்கு வழங்கப் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் நிதி உதவியாக அமையும் எனத் தெரிகிறது.
