அப்படிப்போடு..! அரசுப்பள்ளியில் சேர்ந்தால் வெள்ளி நாணயம் இலவசம்… ஏறும் வெள்ளி விலைக்கு மத்தியில் இப்படியொரு ஆஃபரா…? மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் ஒரு புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலாம் வகுப்பில் முதலில் வந்து சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு தலா 2 கிராம் எடை கொண்ட வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த அதிரடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த வினோத அறிவிப்புக்கு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உயர்த்த இத்தகைய முயற்சிகள் உதவும் எனப் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்வித்துறையிலும் இது ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.