சென்னையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி அயனாவரம், கிண்டி, அமைந்தகரை, கொளத்தூர், மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி தாலுகாக்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க ராதாகிருஷ்ணன், மணவாளன் ஆகிய தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மதுரை, கோவை, சேலம் மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
