தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பஸ் பாஸ் அட்டைகளை பயனாளிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்து கழகம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் நிறுவனத்தோடு இணைந்து மாற்று திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு https://www.tnesevai.tn.gov.in/ இணையதளம் மூலமாக கட்டணமில்லா பஸ் பாஸ் முதற்கட்டமாக கடந்த ஏழாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலமாக தங்களுடைய இருப்பிடத்திற்கு பக்கத்தில் உள்ள அரசு இ சேவை மையம் அல்லது என்ற https://www.tnesevai.tn.gov.in/ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து கட்டணம் இல்லாமல் பஸ் பாஸ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போதிய அவகாசம் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் முப்பதாம் தேதி வரை செல்லத்தக்க பஸ் பாஸ் அக்டோபர் 31ம் தேதி வரை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் விதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…