உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் கடனா…? ஆதார் வரலாற்றை உடனே செக் பண்ணுங்க… மோசடியை தவிர்க்க ஈஸி டிப்ஸ்…!!

By Devi Ramu on தை 27, 2026

Spread the love

ஆதார் அட்டை தற்போது வங்கிப் பரிவர்த்தனை முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்தச் சூழலில், தனிநபர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் ஆதார் எண்களைப் பயன்படுத்தி கடன் வாங்குவது போன்ற முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன.

உங்களின் ஆதார் விவரங்கள் எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ள UIDAI தளம் ‘ஆதார் அங்கீகார வரலாறு’ (Aadhaar Authentication History) என்ற வசதியை வழங்குகிறது. இதன் மூலம் கடந்த காலப் பயன்பாட்டுப் பதிவுகளைச் சரிபார்த்து, அதில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய மாற்றங்கள் இருந்தால் உடனடியாகக் கண்டறிய முடியும்.

   

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டிருந்தால், காலதாமதம் செய்யாமல் 1947 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். மேலும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி அல்லது இணையதளம் வாயிலாகவும் உங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம்.

   

கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் ‘பயோமெட்ரிக்’ தகவல்களை இணையதளம் மூலம் லாக்  செய்து வைப்பதன் மூலம் தேவையற்ற மோசடிகளை முற்றிலுமாகத் தவிர்க்க முடியும். ஆதார் விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் நிதி இழப்புகள் மற்றும் அடையாளத் திருட்டுகளில் இருந்து நாம் தப்பிக்கலாம்.