மும்பை பைதோனி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகிய நான்கு பேரும் நள்ளிரவில் தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர். தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, அதிகாலை வேளையில் அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உடல்நலம் குன்றி உயிருக்கு போராடிய நிலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனின்றி நான்கு பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இரவு நேரத்தில் தர்பூசணி சாப்பிட்டதுதான் மரணத்திற்கு காரணமா அல்லது அந்தப் பழத்தில் விஷத்தன்மை ஏதேனும் கலந்திருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உணவு உட்கொண்ட சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…