தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்று வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய முகமும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பார்த்தசாரதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நம்பிக்கைக்குரிய ‘வலதுகரமாக’ அறியப்பட்ட பார்த்தசாரதி, கட்சியின் இக்கட்டான சூழல்களிலும் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்து தேமுதிகவின் வளர்ச்சிக்குத் தீவிரமாகப் பணியாற்றியவர்.

தமக்கு சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது புறக்கணிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் மாற்றுக்கட்சிக்குத் தாவத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. கேப்டனின் விசுவாசி எனப் பெயரெடுத்த ஒருவரே கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்திருப்பது தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
