அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும் அதிமுகவினரைத் தங்கள் பக்கம் இழுத்து அரவணைத்து வரும் வேளையில், அதிமுக தலைமை மட்டும் நிர்வாகிகளை நீக்குவதிலேயே தீவிர கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த அதிருப்தியான சூழலுக்கு மத்தியில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முக்கிய தலைவர்கள் பலர் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்இணையவுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் பெயரும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
