BREAKING: புதிய ஆட்சியமைந்தவுடன் முன்னாள் அமைச்சர் கைது… உச்சகட்ட பரபரப்பு..!!!

By Muthu Mani on வைகாசி 12, 2026

Spread the love

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் முன்னாள் அமைச்சரான சுஜித் போஸ் அமலாக்கத்துறையால (ED) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த கால நகராட்சித் துறை பணி நியமனங்களில், குறிப்பாகத் தூய்மைப் பணியாளர்கள், பியூன்கள் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், தகுதியற்ற சுமார் 150 பேருக்கு முறைகேடாக வேலை பெற்றுத் தந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவரிடமிருந்து ஊழல் மூலமாகப் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் குறித்த ஆதாரங்களை இ.டி அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.