இந்தியாவில் வசிக்கும் கொரியத் தாய் ஒருவர், தனது மகன் உள்ளூர் சலூன் ஒன்றில் பாரம்பரிய இந்திய முறைப்படி தலை மசாஜ் செய்துகொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், அந்தச் சிறுவனுக்குத் தலையில் எண்ணெய் தேய்த்து, வேகமான மற்றும் தாளக்கதியுடன் கூடிய அழுத்தமான மசாஜ் வழங்கப்படுகிறது.
மேலும் ஆரம்பத்தில் இந்த அனுபவம் அவனுக்குப் புதுமையாகத் தெரிந்தாலும், மசாஜ் தீவிரமடையத் தொடங்கும்போது அவன் காட்டும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான எதிர்வினை காண்போரைக் கவர்ந்து வைரலாகி வருகிறது. மசாஜின் போது அந்தச் சிறுவன் காட்டும் பரவசமான சிரிப்பும், கண்களை மூடிக்கொண்டு அந்த இதமான தருணத்தை அவன் அனுபவிக்கும் விதமும் இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது.
View this post on Instagram
“>
இந்நிலையில் “குழந்தைகள் உண்மையாகவே வாழ்க்கையை ரசிக்கிறார்கள்” என்றும், “அவனது முக பாவனைகள் மிகவும் அழகாக இருக்கின்றன” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் கலாச்சார அம்சங்கள் வெளிநாட்டினரைக் கவரும் விதத்தை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
