காலையிலேயே குஷியான செய்தி… தமிழகம் முழுவதும் இனி ரேஷன் கடைகளில்… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!

By Nanthini on வைகாசி 28, 2026

Spread the love

பொதுமக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் எப்போதும் அன்பாகவும், கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்திராஜ் மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களும் தங்கு தடையின்றி, சரியான எடையிலும், உயர் தரத்திலும் விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதில் எந்தவிதமான முறைகேடுகளோ அல்லது அத்துமீறல்களோ அணுவளவும் அனுமதிக்கப்படாது என்றும், பொதுமக்களுக்குத் தரம் குறைந்த பொருட்களை விநியோகம் செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எளிய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடனும், மக்கள் போற்றும் வகையிலும் அமைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.