இனி கஷ்டப்பட்டு பூ கட்ட வேண்டாம்..! பூக்கட்டும் கலையிலும் புகுந்த டெக்னாலஜி… டிரெண்டாகும் பூ கட்டும் இயந்திரம்…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

பூக்கட்டத் தெரியாதவர்கள் கூட எளிதாகப் பூக்களை மாலையாகத் தொடுக்கும் வகையில் புதிய பூக்கட்டும் இயந்திரங்கள் (Flower Garland Making Machines) தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ளன.இயந்திரத்தில் நூலை மாட்டிவிட்டு, பூக்களை அதன் பிடியில் வைத்தால் போதும். இது தானாகவே பூக்களை முடிச்சிட்டு மாலையாகத் தொடுத்துவிடும். தற்போது சந்தையில் கைமுறை (Manual), பகுதி தானியங்கி மற்றும் முழு தானியங்கி எனப் பல்வேறு வகைகளில் இயந்திரங்கள் கிடைக்கின்றன.

சிறு இயந்திரங்கள் அல்லது கைக்கருவிகள் ₹500 முதல் தொடங்குகின்றன.வணிக ரீதியிலான அல்லது செமி-ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் ₹10,000 முதல் ₹1.5 லட்சம் வரை அவற்றின் செயல்திறனைப் பொறுத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஜாதிப்பூ, மல்லிகை, கனகாம்பரம் மற்றும் சாமந்தி போன்ற பல்வேறு பூக்களை இதில் கட்ட முடியும். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, பூக்கட்டும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக லாபத்தையும் தருகிறது