சென்னையில் இன்று (மே 27) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ₹108.20-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து ₹99.98-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மே மாதத்தில் மட்டும் எரிபொருட்களின் விலை உயருவது இது 6-வது முறையாகும். இந்த தொடர் விலை உயர்வு காரணமாக, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்து, சந்தைகளில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளதால் நடுத்தர குடும்பங்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
