ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டுயானைகள் தாக்குதல்களில் நேற்று ஒரே நாளில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராம்கட் பகுதியில் உள்ள வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் புகுந்த யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதே மாவட்டத்தில் யானைகளை மிக அருகில் சென்று புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயன்ற அமித் குமார் என்ற இளைஞர், யானையிடம் சிக்கி மிதிபட்டுக் இறந்தார்.
மேலும் ராஞ்சி மாவட்டத்தின் ஜிண்டு கிராமத்திற்கு அருகே காட்டில் சென்ற ஒரு நபரை யானை வழிமறித்துத் தாக்கியதில் அவரும் உயிரிழந்தார். வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் விலங்குகளைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…