கர்நாடகா மாநிலம், கலப்புரகி மாவட்டம் சேடம் தாலுக்கா ரஞ்சோலா கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மா (60). இவருடைய மனைவி வெங்கடம்மா (55) , மகன் அனில் (32) , மகள் கவிதா (24), பேரன் அப்பு (2). இவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். நரசிம்மா சொந்த ஊரிலிருந்து ஐதராபாத்திற்கு 20 வருடங்களுக்கு முன்பு குடிப்பெயர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று காலை வீட்டிலிருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை. விடிந்து பலமணி நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சென்று பார்த்தனர். வீட்டிலிருந்த ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்கள் ஐவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தை உட்பட 5 பேரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா, இல்லை யாரேனும் கொலை செய்தார்களா என்று தெரியவில்லை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. பிரேத பரிசோதனை முடிவு இதுவரை தெரியவில்லை. சஞ்சோலா கிராமத்தில் நடந்த மர்மமான மரணம் பெரும் பரபரப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்திவுள்ளது.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில…
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…