கர்நாடகா மாநிலம், கலப்புரகி மாவட்டம் சேடம் தாலுக்கா ரஞ்சோலா கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மா (60). இவருடைய மனைவி வெங்கடம்மா (55) , மகன் அனில் (32) , மகள் கவிதா (24), பேரன் அப்பு (2). இவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். நரசிம்மா சொந்த ஊரிலிருந்து ஐதராபாத்திற்கு 20 வருடங்களுக்கு முன்பு குடிப்பெயர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று காலை வீட்டிலிருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை. விடிந்து பலமணி நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சென்று பார்த்தனர். வீட்டிலிருந்த ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்கள் ஐவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தை உட்பட 5 பேரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா, இல்லை யாரேனும் கொலை செய்தார்களா என்று தெரியவில்லை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. பிரேத பரிசோதனை முடிவு இதுவரை தெரியவில்லை. சஞ்சோலா கிராமத்தில் நடந்த மர்மமான மரணம் பெரும் பரபரப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்திவுள்ளது.
மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…
அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…
கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…
ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…