Categories: சினிமா

அன்றும் இன்றும் என்றும்… பாடல் வரிகளில் வாழும் கவிஞர் வாலி… வாங்கிய முதல் சம்பளம் எவ்ளோ தெரியுமா…?

Spread the love

திரை உலகைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்றால் கதை கதையில் நடிப்பவர்கள் மற்றும் படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்.

எவ்வளவுதான் நாயகர்களும் நாயகிகளும் தங்கள் திறமையை வெளிக்காட்டி நடித்தாலும் படத்தின் பாடல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த ப் பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் என்றும் தங்களின் வரிகளால் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இடம் பிடிப்பார்கள்.

அப்படி அன்றும் இன்றும் தனது பாடல் வரிகளால் ரசிகர்களிடையே நிலைத்து நிற்கும் ஒருவர் தான் கவிஞர் வாலி. 1958 ஆம் வருடம் வெளியான அழகர்மலைக் கள்வன் என்ற திரைப்படத்திற்காக வாலி தனது முதல் பாட்டை எழுதினார். அதன் பிறகு திரை உலகில் நான்கு தலைமுறையாக வந்த நடிகர் நடிகைகளுக்கு வாலி பாடல் எழுதிக் கொடுத்துள்ளார்.

அவ்வகையில் சுமார் 15,000 பாடல்களை வாலி எழுதியுள்ளார். அவரது கவித்திறனை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் தேசியகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டது. அதேபோன்று பாரத விலாஸ் திரைப்படத்திற்காக அவர் எழுதிய இந்திய நாடு என் வீடு என்ற பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்க அரசு முன் வந்தது. ஆனால் அதனை வாலி ஏற்க மறுத்துவிட்டார்.

எத்தனையோ பாடல்களை எழுதி லட்சக்கணக்கில் வாலி சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அவர் முதல் முதலில் வாங்கிய சம்பளம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தனது முதல் சம்பளமாக வாலி 75 ரூபாயை வாங்கியுள்ளார்.

indhuramesh

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

5 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

15 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

53 minutes ago