முதலிரவு அறையில் மணப்பெண் கேட்ட ‘அந்த’ ஒரு விஷயம்… அலறியடித்து ஓடிய மணமகன்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!

Spread the love

ஆக்ராவில் அரங்கேறியுள்ள இந்த வினோதமான திருமண மோசடி சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜகதீஷ்புரத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அண்மையில் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க ஆவலோடு காத்திருந்த மணமகனுக்கு, முதலிரவு அறையிலேயே பேரிடி காத்திருந்தது. கனிவான வார்த்தைகளை எதிர்பார்த்த மணமகனிடம், புதுப்பெண் எடுத்தவுடனேயே 90 லட்சம் ரூபாய் ரொக்கம் கேட்டதுடன், பணம் தந்தால் மட்டுமே முதலிரவு நடக்கும் என்று கறாராக நிபந்தனை விதித்து அதிர வைத்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டிய மனைவியின் செயலால் அதிர்ச்சியடைந்த மணமகன் மறுப்பு தெரிவிக்கவே, அறைக்குள்ளேயே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, மணப்பெண் தனது வீட்டாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பெண்ணின் வீட்டார், மணமகனுக்கு ஆதரவாகப் பேசுவதற்குப் பதிலாக வன்முறையில் இறங்கியுள்ளனர். வீட்டின் எரிவாயு குழாயைத் திறந்துவிட்டு தீ வைக்க முயன்றதுடன், மணமகன் வீட்டாரை அறைக்குள் வைத்துப் பூட்டி மிரட்டல் விடுத்தது அங்கிருந்தவர்களைக் கலக்கமடையச் செய்தது.

இந்தக் கலவரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, முதலிரவு அறையில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் மாமியாரின் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் தப்பியோடிவிட்டார். பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும், பணம் மற்றும் நகைக்காகவே ஆசை காட்டப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். திருமணமான சில மணிநேரங்களிலேயே மணப்பெண் வீட்டார் காட்டிய இந்த விஸ்வரூபம், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பண மோசடியோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்ட நிலையில், மணமகன் வீட்டார் தற்போது நீதிமன்றத்தை நாடி நீதி கேட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்தத் திருமணத்தை முன்னின்று நடத்திய தரகருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், திருமணத்திற்குப் பின் நடக்கும் நவீன கால மோசடிகள் குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

2 minutes ago

“பிளாஸ்டிக் குப்பைக்கு குட்-பை..! இந்தியாவில் முதல்முறையாக ‘மக்கும் பால் பாக்கெட்’… மதர் டெய்ரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவு…!”

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…

7 minutes ago

“நெருங்காதே”.. முதலிரவில் கட்டாயப்படுத்திய கணவன்… மணமகள் கொடுத்த ‘பளார்’ அடி.. இருவீட்டார் மோதலில் மணமகனுக்கு நேர்ந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி..!!

திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…

12 minutes ago

ஆசை யாரைவிட்டது..? ₹20 மாம்பழ ஆசை… “மாம்பழமும் போச்சு… மானமும் போச்சு” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை வெளுத்தெடுத்த தோட்டத்துக்காரர் – நெட்டிசன்கள் கிண்டல்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…

13 minutes ago

“நெஞ்சே நடுங்கிடுச்சு.. ஒன்றல்ல, இரண்டல்ல.. அடுத்தடுத்து வந்த நாகப்பாம்பு.. தெறித்து ஓடிய விவசாயி.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…

22 minutes ago

“காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லையா..?” அரசு மருத்துவமனையில் போலீஸ் அதிகாரியை பளார் என அறைந்த போதை வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…

26 minutes ago