Categories: சினிமா

தமிழ் சினிமாவில் முதன் முதலில் 100 படங்களில் நடித்து சாதனைப் படைத்தது இந்த தம்பதிகள் தான்..

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.

முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகள் வரை காமெடி டிராக் என்பது ஒரு கமர்ஷியல் படத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது. அதற்கு வித்திட்டவர் என் எஸ் கிருஷ்ணன்தான்.

இவர் தன்னுடைய மனைவி மதுரத்துடன் இணைந்து முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை கலந்து தான் நடிக்கும் படங்களில் கூறிவந்தார். இதனால் இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்றே ஒரு தனிக்கூட்டம் அந்த காலத்தில் உருவானது. இதனால் அதிகளவிலான படங்களில் இருவரும் நடித்தனர்.

தமிழ் நடிகர், நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான். ஆனால் எதிர்பாராத விதமாக கலைவாணர் என் எஸ் கே லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றதால் அவரின் நடிப்புக்கு இடைவெளி விழுந்தது. ஆனால் அந்த வழக்கில் குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்தார். ஆனால் 1957 ஆகஸ்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்  மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி தனது 49 ஆவது வயதிலேயே உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலம் சென்னையில் நடந்த போது அதில லட்சக் கணக்கானவர்கள் கலந்துகொண்டனர் என சொல்லப்படுகிறது.

கலைவாணர் மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.  சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் 1974ம் ஆண்டு மே 23ந்தேதி காலமானார்.

vinoth

Recent Posts

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

6 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

8 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

29 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

41 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

46 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

56 minutes ago