புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 13 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, நூறு அடி சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதன் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பேருந்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனிக்காத ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை இயக்கி வந்த நிலையில், பின்னால் ஆட்டோவில் வந்த ஓட்டுநர் ஒருவர் இதனை உடனடியாகக் கவனித்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பேருந்தை முந்திச் சென்று, ஓட்டுநரை எச்சரித்து பேருந்தை நிறுத்தச் செய்தார்.
ஆட்டோ ஓட்டுநரின் சமயோசித எச்சரிக்கையைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட, உள்ளே இருந்த 13 பயணிகளும் பதற்றத்துடன் கீழே இறங்கினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீயைக் கண்டறிந்து உயிர்களைக் காத்த ஆட்டோ ஓட்டுநரின் தீரச் செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு…
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…
தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…
மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…