நள்ளிரவில் கொழுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்து… தூக்கத்தில் அலறிய பயணிகள்… அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்…!

Spread the love

புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 13 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, நூறு அடி சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதன் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பேருந்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனிக்காத ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை இயக்கி வந்த நிலையில், பின்னால் ஆட்டோவில் வந்த ஓட்டுநர் ஒருவர் இதனை உடனடியாகக் கவனித்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பேருந்தை முந்திச் சென்று, ஓட்டுநரை எச்சரித்து பேருந்தை நிறுத்தச் செய்தார்.

ஆட்டோ ஓட்டுநரின் சமயோசித எச்சரிக்கையைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட, உள்ளே இருந்த 13 பயணிகளும் பதற்றத்துடன் கீழே இறங்கினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீயைக் கண்டறிந்து உயிர்களைக் காத்த ஆட்டோ ஓட்டுநரின் தீரச் செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Nanthini

Recent Posts

தம்பிங்களா..! மானம், சூடு, சொரணை பாக்காம ரூ.3000 வாங்கிக்கோங்க… தவெக லயோலா மணி அதிரடி…!!

திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு…

6 minutes ago

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… மார்ச் 31-க்குள் e-KYC முடிக்காவிட்டால் பொருட்கள் கட்…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…

9 minutes ago

பெரும் பயங்கரம்..! கடற்கரையில் தொங்கவிடப்பட்ட 5 மனித தலைகள்… போதைப்பொருள் கும்பல் மோதலால் அதிரும் நாடு..!!

தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…

19 minutes ago

“இது நல்லதல்ல” இந்தியாவுக்கே அவமானம்… “கேட்வே “அருகே கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர்… வீடியோ எடுத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி…!!

மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

32 minutes ago

“யார் மிரட்டினாலும் வீடியோவை நீக்கமாட்டேன்” ஸ்விக்கி ஊழியர் ரயில் விபத்து… ஆதாரத்தை அழிக்க சதி..?… மர்ம நபர்களின் மிரட்டலுக்கு யூடியூபர் பதிலடி…!!

ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…

38 minutes ago

“அவன் தான் வேணுமா உனக்கு” நகைகளை எடுத்துக்கொண்டு காதலனோடு ஓடிய மனைவி… போலீஸ் முன்பாகவே சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…

44 minutes ago