டெல்லி மெட்ரோ ரயிலில் இருக்கைக்காக ஏற்பட்ட தகராறு, ஒரு பெண் பயணியை ஆணின் கன்னத்தில் பலமாக அறைய வைத்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயிலின் கூட்ட நெரிசலுக்கு நடுவே, அமர்வதற்கு இடம் பிடிப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்த வாய்த்தகராறு முற்றிய நிலையில், அந்தப் பெண் திடீரென ஆக்ரோஷமடைந்து அந்த நபர் மீது கை வைத்தது அங்கிருந்த மற்ற பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இருவருக்கும் இடையே கடுமையான சொற்போர் நடப்பதைக் காண முடிகிறது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண், அருகில் இருந்த மற்ற பயணிகள் தடுத்தும் கேளாமல், அந்த ஆணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விடுகிறார். இந்த ‘சத்தமான’ அறைக்குப் பின் அங்கிருந்த சூழல் மேலும் பதற்றமானது. டெல்லி மெட்ரோவில் இது போன்ற சண்டைகள் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது “ஜோர் கா தப்பாட்” (Zor Ka Thappad) என்ற பெயரில் வைரலாகி வருகிறது.
Kalesh b/w a Girl and Uncle inside Delhi Metro over seat issues: pic.twitter.com/5Notdrxdlu
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 29, 2026
இந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகள் இருவேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், பொது இடங்களில் பெண்களுக்கு எவ்வளவு எரிச்சல் இருந்தாலும் வன்முறையைக் கையில் எடுப்பது தவறு என்று கூறி வரும் நிலையில், மற்றவர்களோ இருக்கை விவகாரத்தில் ஆண்கள் சில சமயம் எல்லை மீறுவதாலேயே இப்படி நடப்பதாகத் தெரிவிக்கின்றனர். டெல்லி மெட்ரோவின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் நன்னடத்தை குறித்து மீண்டும் ஒரு பெரிய விவாதத்தை இந்த வீடியோ கிளப்பியுள்ளது.
