திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு குட்கா வழக்கில் பாலமுரளி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த காலத்தில், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் காவல் நிலையத்திலேயே ஒப்படைக்கப்பட்டிருந்தது. தண்டனை முடிந்து வெளியே வந்த பாலமுரளி, தனது அலைபேசியைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஜி-பே (G-Pay) மூலம் மர்மமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பாலமுரளி உயர் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி. சுதாகர் தீவிர விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், கீழ்பென்னாத்தூர் உதவி ஆய்வாளர் (SI) கவிதா என்பவர், பாலமுரளியின் செல்போனைப் பயன்படுத்தி அவரது பணத்தைத் தனது உறவினரின் கணக்கிற்குத் திருட்டுத்தனமாக மாற்றியது ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரியே இத்தகைய மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எஸ்.ஐ. கவிதாவை அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Sustain) செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…