ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனந்தகிரி மலங்குமி நீர்வீழ்ச்சிக்கு ஐந்து பெண்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தபடி, பாறைகளின் நுனியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மூன்று பெண்கள் வழுக்கி விழுந்தனர். மற்றவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், நீரில் மூழ்கி அந்த மூன்று பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
#Exclusive
విశాఖ:అల్లూరి జిల్లా అనంతగిరి మండలంలో మలంగుమ్మి వాటర్ఫాల్స్ వద్ద సరదాగా వెళ్లిన ఐదుగురు బాలికల్లో ముగ్గురు దుర్మరణం చెందిన వీడియో ఇదే.
సెల్ఫీ మోజులో పడి ప్రాణాలు కోల్పోయిన ముగ్గురు బాలికలు త్రిష (17), రత్నకుమారి (16), పవిత్ర (16) pic.twitter.com/T2OY83dvEK
— Vizag News Man (@VizagNewsman) April 9, 2026
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் த்ரிஷா (17), ரத்னகுமாரி (16) மற்றும் பவித்ரா (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் சென்ற இடத்தில், ஒரு நொடி கவனக்குறைவால் மூன்று இளம் உயிர்கள் பறிபோனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்நிலைகளில் செல்ஃபி எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
