BREAKING: அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இனி கட்டணம்.. புதிய மசோதாவை தயாரித்த ஈரான்..!!

By Soundarya on பங்குனி 26, 2026

Spread the love

ஈரான் அரசு ஹார்முஸ் நீர்இணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் வசூலிக்கும் நோக்கில் புதிய சட்ட மசோதா ஒன்றை மாற்றியமைத்துள்ளது. ஒரு நாட்டின் எல்லை வழியாகப் பொருட்கள் கடந்து செல்லும்போது அதற்குக் கட்டணம் வசூலிப்பது என்பது சர்வதேச அளவில் இயல்பான நடைமுறைதான் என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.

இந்த மசோதா விரைவில் ஈரான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீர்இணையில் இத்தகைய கட்டண முறை அமல்படுத்தப்படுவது, சர்வதேசக் கடல் வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.