இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ஃபெடரல் வங்கியில், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடிக்காதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாதம் 19,500 ரூபாய் முதல் 37,815 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படவுள்ள இப்பதவிக்கு, ஜனவரி 8, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், கணினி குறித்த அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதற்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பொதுப்பிரிவினர் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். வங்கிப் பணியில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து இந்த ஜாக்பாட் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…